articles

விடுதலை வேள்வியில் இணைத்துக் கொண்டவர்

“விடுதலை வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவர், இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர், மதுரை மாணவர் சங்கத்தின் முதல் செயலாளர், மதுரை கிழக்கு, மேற்கு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர் தோழர் சங்கரய்யா. அவர்களின் மரணம் பொதுவுடமை இயக்கத்திற்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது கட்சித் தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் காமராஜர் மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று காமராஜர் மக்கள் கட்சி, மாநிலப் பொதுச் செயலாளர் பா. குமரய்யா இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.